இங்கு தான் வைத்தேன்
நிச்சயம் தெரியும்...
காலையில் நான் பார்த்தேனே
மனைவியின் சாட்சி...
ரொம்ப நாளாகவே
செய்தித்தாள் போடுபவன்மேல் சந்தேகம்...
பால்க்கார சிறுவனோ?
பாத்திரம் தேய்க்கும் பாட்டியோ?
பட்டியலிட்டு பட்டியலிட்டு
பலனின்றி போனது பொழுது...
களைத்தோய்ந்து படுக்கையில்
இரவு விளக்கொளியில் சிரிக்கிறது
மகளின் கரடி உண்டியல்...
அருண்குமார் சே
Thursday, July 15, 2010
காட்சிப்பிழை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment