நெடுஞ்சாலை பழுதென்று
திருப்பிவிடப்பட்ட வாகனங்கள்
குறும் சந்தில் விரைவதாய்
அனுமதியின்றி பயணிக்கின்றன
உன் நினைவுகள் என்னுள்...
சாலை சிறிதென்ற சலிப்போடு
இறக்கப்டாத கண்ணாடி வழியே
தூசு பறக்கும் தெருக்களை
உள்வாங்காமல் விரையும்
சுவாரசியமற்ற உன் பயணம்...
இந்த காரு எம்புட்டு வேகமா
அழகா போகுது - என்றேங்கும்
சேரி குழந்தையின் ஆச்சர்யமாய்
உன்னை தொடர்கிறது
பேத உள்ளீடற்ற மனசு...
அருண்குமார் சே
Thursday, July 15, 2010
செம்புல பெயனீர்...
காட்சிப்பிழை...
இங்கு தான் வைத்தேன்
நிச்சயம் தெரியும்...
காலையில் நான் பார்த்தேனே
மனைவியின் சாட்சி...
ரொம்ப நாளாகவே
செய்தித்தாள் போடுபவன்மேல் சந்தேகம்...
பால்க்கார சிறுவனோ?
பாத்திரம் தேய்க்கும் பாட்டியோ?
பட்டியலிட்டு பட்டியலிட்டு
பலனின்றி போனது பொழுது...
களைத்தோய்ந்து படுக்கையில்
இரவு விளக்கொளியில் சிரிக்கிறது
மகளின் கரடி உண்டியல்...
அருண்குமார் சே
Subscribe to:
Posts (Atom)