சட்டமிடப்பட்ட என் சாளரம் வழியே
சற்றும் அனுமதியின்றி உட்புகுந்து
அசட்டை செய்கிறது ஒரு சிட்டுக்குருவி...
அதனலகில் கொணரும் யாவும்
தன்னழகு பெண்ணழகின் முன்னழகு...
நிசப்த அலைவரிசையில் இசைக்கும்
எந்தன் தனிமை கூடுடைத்து...
மூர்க்கமாய் போரிடும்
முணுகளோடு கொஞ்சும்
சாளர கண்ணாடியில் படியும்
தனதந்த பிம்பத்தோடு...
சின்ன கண்சிமிட்டும்
மெல்ல தலையசைக்கும்
சட்டென சிறகடிக்கும்
நிமிடத்தில் மறைந்து போகும்...
அருகில் செல்ல விழிகளில் படரும்
உதிர்ந்த சிறகுகளும்
உதிர்த்த குப்பைகளுமாய்
நாசி துளைக்கும் அதன்
எச்ச மிச்சங்களோடு...
அருண்குமார் சே
Thursday, May 12, 2011
யாவிலும் யாவும் உள...
Subscribe to:
Posts (Atom)