முன்பொரு மழைப்பொழுதில்
ஒரு குடையில்
உன்னிடம் என்வலம் நனைய
நடந்தோம் வெகுதூரம்...
முதலிருமுறை உரசியபோது
மன்னிப்பு கேட்டாய்...
தோல்பையை நடுவில் தள்ளி
நீ நனைந்தாய் சிலநேரம்...
அருகருகே இருந்தும், கிடந்தோம்
தொடர்பு எல்லைக்கு வெளியே...
நம்மிருவர் மௌனத்தை சேர்த்து
குடையோடு பேசியது மழை...
ஏறத்தாழ முழுவதுமாய்
நனைந்த பொழுதில்
நின்று போனது மழையும்...
வெரித்தோடிய சாலைவழி
தனித்து நடக்கையில்
இன்றும் பரவுகிறது
மனதெங்கும் ஈரம்...
அருண்குமார் சே
Wednesday, November 17, 2010
சுவடுகள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment