இருள் சூழ்ந்த பொழுதொன்றில்
ஒளித்துளி தேடி திரிகின்றன விழிகள்...
சமதளத்தில் சிறுகுன்று பெரும்பள்ளம்
யாவும் காட்டுகிறது மனத்திரை...
இடறுகிறேன் இருக்குமிடம் அறியாமல்
கசிவது ஏதேன தெரியவில்லை
புசிப்பது யாதென புரியவில்லை
பயணிக்கிறேன் பாத வழியில்...
விசையறுந்த நசையொன்று
திசை தேடி திரிய
மெல்ல கிழிகிறது
நாட்காட்டியின் பக்கங்கள்...
மனத்திரை எங்கும் பரவுகிறது
மர்மமுடிச்சவிழ்ந்த பெரும்பரப்பு
உலவுகிறேன் எனதுலகின்
அரசன் நானென...
முளைவிடும் ஒளிக்கீற்று
சுமையென படுகிறதின்று...
அருண்குமார் சே
Wednesday, November 17, 2010
காலக்கிளர்ச்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment