தன் ஒற்றொடு மட்டும்
இரட்டிக்கும் சுயநலம்...
உயிர் என வரின்
விட்டோடும் பேதமை...
உடற்சதைக்காய் உயிர்விடும்
சபலம், அவலம்...
ஆதியில் நீண்டது
இடை இடையே குறைந்து
ஈற்றில் தொலைந்ததே நிச்சயம்...
இயல்புகள் விகாரங்களாய் மிகைப்பட
விகாரங்கள் இயல்பாய் நடந்தேறுகிறது...
வன்புணர் வார்த்தைகளிலெல்லாம்
மறைந்து போகிறது எழுத்துக்களின் காயம்...
இலக்கணம் இதுவென ஆனபின்
எங்கனம் வழக்குரைப்பது?
அருண்குமார் சே
Friday, October 28, 2011
வாழ்விலக்கணம்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment