Thursday, March 21, 2013

நான் சிலையாகிறேன்...

சிலையோடு பேட்டிகாண்பது
சிறுமையல்ல நண்பர்களே
நிலைபெறா மானுட வாழ்வுதனில்
சிலைபெறல் எளிதல்ல...
எப்படி அடைந்தாய் இத்தனை தூரம்
என்ன சுமந்தாய் உன்னில் பாரம்
மெதுவாய் துவங்கினேன்...
பொதுவாய் கருவாய்
உருவாய் உருவான ஒன்று
சிலையாய் நிலையாய்
நிலைத்ததின் சூட்சமம் சொன்னது...
அரசியல் அரியணை அத்தனையிலும்
அடைக்கப்பட்ட ஆருயிர் எண்ணிக்கை சொன்னது...
புதைக்கபடா புராணங்கள் -
இன்னும் வளராத வரலாறுகள் -
சொன்னால் சலிக்காத
சரித்திரங்கள் சொன்னது...
தட்பவெட்பம் தாங்கும் தேகம்
இச்சை பிச்சை ஏற்கா தீரம்
சிலை கொள்ளும் அது
நீ என சிறுமை செய்தது...
உண்மையற்ற உயிர்களைவிட
உணர்ச்சியற்ற தான் மேலென
பெருமை சொன்னது...
சற்றே நான் திகைக்க
உள்ளூர் உதாரணம் சொல்லவா என்றது...
சரியென சிரமசைக்க,
சிலம்போடு ஒருத்திக்கு
மதுரை மிரண்டதை விட
சிலையான பின்னாலே
சென்னை மிரண்டது
அதிகமடா என்றது...

அன்புடன் அருண்குமார் சே

No comments: