Friday, March 22, 2013

இழப்பின் பிறப்பு...

அறவழிகள் யாவும் அகதியாய் போயின
காந்தியம் போதும்
என் கணிப்பொறி மாற்றி
கனரக துப்பாக்கி ஒன்று கொடுங்கள்...
என் மொழி என்ற கவசம்
தன் இனம் என்றொரு விலாசம்
வேண்டாமடா ...
அனகொண்டாவும், டைனோசரும்
கொரிலாவும், கோட்சிலாவும்
கொல்லப்பட வேண்டியவை எனில்
சகமனிதன் குருதி குடிக்கும்
யாவும் கொல்லப்பட வேண்டியவையே ...
புலி என்று கூறி
கூண்டில் அடைப்பீர்
அன்றேல் அழி என்று கூறி
குண்டு துளைப்பீர்
ஆகட்டும் போ என்றே
அனைவரும் சேர்ந்தால்
சாகட்டும் என விடுவீரோ
ஒரு சரித்திர கூட்டத்தை ...
அறுத்தெறிந்த மார்புகளா
உம்மேல் அணுகுண்டு வீசின
அரும்பா மொட்டுகளா
உம்மேல் ஆயுதம் தொடுத்தன...
உமிழ் நீரில் தரித்ததோ
உன் தாயின் கர்ப்பம்
அரியாசனம் பெறவா
இத்தனை அற்பம்...
அட சீ .... போதுமடா
உங்கள் இறையாண்மை கொள்கை
நீங்கள் இரைகொண்ட
எங்கள் ஆண்மையின் வலிமை ...
வாக்கு சாவடிகளில் மட்டுமே
நீண்ட சுட்டுவிரல்கள்
வழக்காட நீள்கிறது
உங்கள் போக்குகளில் சென்ற
வையம் சற்றே மீள்கிறது ...
இதுவே தருணமென
இதயம் கொள்ளுங்கள்
இல்லை இனியும் முடியாதெனெ
இடுகாடு செல்லுங்கள் .....

அருண்குமார் சே

No comments: