Thursday, March 21, 2013

எங்கென தேடிட!!!

தொட்டாஞ்சிணுங்கியின் சிணுங்கள்
வீழும் அருவியின் பேரிரைச்சல்
தூவும் மழையின் ஈரம்
வீசும் காற்றின் மென்மை
கிளை விரித்த மரத்தின் நிழல்
மொட்டவிழ்ந்த பூவின் வாசம்
ரீங்காரமிடும் கொசுவின் சிறகு
ஓடும் நதியின் ஒரு சுதி
தகிக்கும் ஒளியின் வெட்பம்
யாவும் பதிக்கின்றன அதனதன் இருப்பை...
நான் வந்து சென்ற சுவடு தெரிவதில்லை
எனக்கும் கூட!!

அருண்குமார் சே

No comments: