Monday, April 6, 2009

நான் வளர்த்த போதி மரம்....

ஐம்புலன் அடக்கி
இரு புருவம் இடையே
நிஷ்ட ஜோதி மூட்டி
அகிலம் துண்டித்து
அர்ச்சனை நூறு சொல்லி
நெய் விளக்கொளியில்
நெடுநேரம் வெந்து
பஞ்சமாபூதங்கள்
பாதம் கழுவி
மும்மூர்த்திகள்
முழுநாமம் முழங்கி
நிஷ்டை கலைத்து
திரும்பி பார்த்தேன்
பட்டு போயிருந்தது
பாதி மரம்......

காற்றோடான பலப்பரிட்சையில்
கிளைவிட்டு கீழ் விழுந்த
குருவி கூடொன்று எடுத்து
மீண்டும் கிளைசேர்த்த
கணநேர பொழுதொன்றில்
என் பின்னே வளர்ந்ததொரு
புத்தம் புது போதி மரம்.....

அருண்குமார் சே

No comments: