Tuesday, April 7, 2009

பூ பூத்த பாலைவனம்......

நிசி எல்லாம் உழச்சாலும்
பசி தீர வழியுமிள்ள
பலி கொடுத்தும் மகமாயி
எலிக்கறி தான் திங்க வச்சா.....
கிழிச்சு கட்டுன கோவனத்துல
இன்னும் நாலு கிழிசலு
நாங்க முக்குளிச்சா
அத்தனையும் கிளிஞ்சலு.....
கலப்பை பூட்டுன காளமாடு
இருட்டிபுட்டா ஓய்வெடுக்கும்
களைப்பு அறியா எருமைமாடு
நான் கண்ட சுகம் ஒண்ணுமில்ல....
கம்ப்யூட்டர் தட்டிபுட்டா
பிசா கோக் உனக்கு வரும்
அடகு வச்சு விதை போட்ட
என் ஆத்தா தாலி எப்ப வரும்....
வேசியா பொறந்தா கூட
விலை சொல்லும் உரிமை உண்டு
விவசாயா பொறந்ததால
இன்னும் அந்த உரிமை இல்ல....
போட்ட விதை முளைக்கவில்ல
சாமிகுத்தம் ஆகிபோச்சாம்
விளைஞ்ச பின்னும் ஒண்ணுமில்ல
சாமி குத்தம் செஞ்சிடுச்சோ....
முலப்பாலு இல்லாம
எம்புள்ள சாவக்கிடக்க
ஞானப்பால் குடுத்த கதை
நானெப்படி நம்புறது....
விளச்சவன் வெல சொல்லும்
விடியல் ஒன்னு பொறக்க வேணும்
சொடலமாடன் நீ இருந்தா
கண்ண கொஞ்சம் தொறக்க வேணும்....

அருண்குமார் சே

No comments: