Tuesday, April 7, 2009

சும்மா வெறும் கவிதையில்ல.....

தெக்கத்தி மூலையில
திக்கத்து நின்னாலும்
தேசிங்குராஜன்
நாந்தான்னு சொன்னவளே.....
கற்புன்னு சொன்னாலே
எரிச்சவ எரிஞ்சவ
இருபேரு கத சொல்லி
இறுமாப்பா போனானே....
அவன் கடவா பல் உடைச்சி
கையில தரவேணும்
மவராசி உன் பெரும
மடையனுக்கு தெரியலையே......
அழகுன்னு சொன்னாலோ
அது உன்ன திரும்பி பாக்கும்
இது அறியா கூட்டம் தான்
போட்டியில பொழுது போக்கும்....
கடிகார முள் கூட
கால் வலிச்சி நின்னதுண்டு
கண்மணியே நீ நின்னு
ஒரு நாழி பார்த்ததில்ல.....
வரவு செலவு பார்த்ததில்ல
வந்த உறவு கவனிச்சதில்ல
அத்தனையும் நீ தானே
ஆணிவேரா பாத்துக்கிற....
தாத்தா கதை தேவதையும்
ஆத்தா முலபாலும்
சேத்தா நீ தானே
பாத்தா தெரியாதா?....
என் கோண புத்தி நெனப்பெல்லாம்
ஞான கீர்த்தி நீ அறிவ
உனபத்தி ஒரு நாளும்
நான் அறியாம போனாலும்....
பத்தாளு போனாலும்
பலமாத்தான் நானிருக்கேன்
ஒத்தாளு நீ போனா
உலகம் விட்டு போகுதடி....
எமனே வந்தாலும்
போகாத தன்னால
என்ன அனுப்பிட்டு
நீ வாயேன் பின்னால....
நெனபெல்லாம் நீதாண்டி
நெருபாட்டம் எரியுற
நிசமாத்தான் சொல்லுறேன்
எப்படி சொல்ல தெரியல....
சாவகுள்ள சத்தியமா
உன்கடன தீர்த்துடுறேன்
இல்லையா அடுத்த சென்மம்
நீயா நான் பொறந்துடுறேன்....

அருண்குமார் சே

1 comment:

Valli said...

yen..yen ippadi...superb..