முகமூடி விற்பனை பெருகும்
மறந்து போகும் கால கொடூரம்
மீண்டும் வருவார் வாசல் தேடி
மீண்டு வரா காரணம் கூறி....
அம்புலி சோறூட்டி
வளந்த பழக்கமது
இன்னும் தொடருதடா
இன்னல் பெருக்குதடா....
ஓட்டு சந்தை தேசமடா
ஆட்டு மந்தையின் மோசமடா
சாதிக்கு பிறந்த கூட்டம்
சாதிக்க போவதென்ன??.....
மும்பை எரிந்த சாம்பல் பறக்கும்
மும்தாஜ் பாடலில் எல்லாம் மறக்கும்
இலங்கை யுத்தம் ரணமாய் வலிக்கும்
ரகுமான் ஆஸ்கர் குணமாய் இனிக்கும்....
குனிந்து குனிந்து பழகியதாலே
எழுந்து நிற்க துணிச்சல் இல்லை
விழுந்து விழுந்து வணங்கியாதாலே
விளைஞ்ச பலனும் ஒண்ணுமில்லை....
யாரென்று குற்றம் சொல்ல
வியாபார சந்தையிலே
உருவாகும் மாயை அது
உதவாத மொந்தையிலே.....
சாகா வரம் பெற்ற
சாம்ராஜ்யம் இங்கு உண்டு
இடுகாடு பிணம் கூட
உரு மாறும் சக்தி உண்டு....
அருண்குமார் சே
Tuesday, April 7, 2009
உரு மாறும் நேரம்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment