Tuesday, April 7, 2009

யுகம் கடந்த முகம்....

உருக்கி ஊற்றி
பிதுக்கி தள்ளிய போது
நிசப்த கூடுடைத்து
எழுந்த முகாரி
இன்னும் ஆழ்மனதில் ஒலிக்கிறது
ஆசுவாசமற்று....
ஒற்றை உயிர் திரிகிறது
ஓராயிரம் சிலுவை சுமந்து...
உருக்கி வார்த்து
உருவாக்குதல் சரி
உருவானவனை எதற்கு
அச்சில் வார்க்கிறிர்கள்....
நிழலாய் நகலாய்
செத்தொழிந்து போகவோ
மென்று துப்பிய வாழ்கையை
தின்று வாழவோ விருப்பமில்லை.....
தேடல் எல்லாம்
யுகம் கடந்த ஒரு முகம்.....

அருண்குமார் சே

No comments: