செரிக்காத உணவாய்
தொண்டைக்குழி வரை வந்து போகிறது,
சொல்ல படாத காதல் ஒன்று...
இருபதின் இளமைகளில்
இருளை போர்த்திக்கொண்ட
ஒரு மாலை பொழுதில்
நேர்ந்ததாய் ஞாபகம்...
தடாகத்தில் விழுந்த கல்லாய்
பார்த்த நிமிடத்தில் அலைகளை பரப்பினாய்...
உள்ளுக்குள் சுமந்த மாத்திரத்தில்
உடனடியாய் கவி ஆனேன்
நீரோவின் பிடில் இசையில்
தாஜ்மகாலின் மடியில் கிடந்தேன்...
குரல் வளை நெரிக்கும்
சமூகத்தின் மூச்சு திணரலில்
எதிர் திசை ரயில்களாய்
காணாமல் போனோம்...
நெடும்சாலை மைய கோடுகளாய்
நரை தெரிய
நாற்பதின் பிற்பகுதியில்
கண்ணாடியில் படர்கிறது
மெல்லிய அவள் நிழல் உருவம்...
இரகசியமாய் அழுகிறேன்
அவசியமாய் சிரிக்கிறேன்
மருந்தாய் ஏற்கொண்ட வாழ்க்கை நகர்கிறது
அதன் போக்கில்...
இன்றும் ...
செரிக்காத உணவாய்
தொண்டைக்குழி வரை வந்து போகிறது,
சொல்ல படாத காதல் ஒன்று...
அருண்குமார் சே
Tuesday, April 7, 2009
எல்லாம் சொல்ல முடிவதில்லை, எத்தனை முறை சொன்னாலும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Anna ithellam oru booka podalamla?....
naan venumna vilavukku thalamai thaanga varen....
yaaravathu koopdunga pa...
sollave illa...
:)
Post a Comment