வெளிச்சொல்லாது விழுங்கிய புழுங்கல்களில்
வெடிக்கிறது இதயம்...
மூர்ச்சை அற்று கிடப்பவன் முகத்தில்
தெளிக்கப்படும் மூன்றாமவன் குருதி...
தேன் நக்கும் வாயாய்
விரல்களை விழுங்கும் லாட்டரிகள்....
பொற்கோயில் ஆகட்டும்
திரு ஒடுகளே முன்னால்...
கதவுகளுக்குள் விற்கப்படும் கற்பு
காரணத்துடனும்....
கோவணம் விற்று
மூன்றாம் ஆட்டத்துக்கு டிக்கெட்டு....
வலைக்குள் எலிகள்
வாழ்க்கைக்குள் நீங்கள்....
களைகலுக்கு வேலி இட்டு
பயிர்களை மறந்து போன பரிதாப வாழ்க்கை...
விரல்களின் அழகிற்காக
நகங்களின் நிறம் மாற்றும்
நாடக வாழ்க்கைக்கு
நான் கூட வருவேன்.....
வால் முளைத்து
கிளை தாவும் பொழுதில்....
அருண்குமார் சே
Tuesday, April 7, 2009
பரிணாமத்தின் விளிம்பில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment