Tuesday, April 7, 2009

நிஜங்கள் அற்ற நிழல்கள் .....

பேயேன இரையும் அலாரச்சத்தம்
நித்தமும் பறித்து எடுக்கிறது
படுக்கை விட்டு....
கடிகார முட்களுக்குள்
தொலைந்த வாழ்க்கை
என்றும் போல் துவங்குகிறது
சற்றும் மாறாமல்....
விட்ட இடத்தில
தொடங்குகிறது ஆட்டம்
வித்தியாசமின்றி
விளக்கங்களின்றி....
ரசம் போன கண்ணாடியாய்
ரசனை அற்ற பயணம்
பரிச்சயமற்ற முகங்கள்
பழக்கமற்ற புன்னகைகள்
இன்னும் நம்மை சுற்றி....
சட்டென அறுந்து போக கூடும்
இந்த சமரச வாழ்க்கை....
ஒரு நாளேனும் வாழவேண்டும்
அரசனாய்
அகதியாய்
பிட்சுவாய்
பிட்சைக்காரனாய்
குறைந்த பட்சம் மனிதனாய்....

அருண்குமார் சே

No comments: