Tuesday, April 7, 2009

வலுவற்று....

நித்தம் நூறு முறை ஒத்திகை பார்த்து,
வறண்டு போன வார்த்தை எல்லாம்
முரண்டு பிடித்து இழுத்து கட்டி
வேல் கம்பு விழி அம்பு
விலாவினில் பாய்ந்து
உயிர் கொண்டு போகாமல்
உறவாடி கொன்றதை...
கண்ணாடி சிற்பம்
கையாளும் விதம் சொல்லி
நீ உணராத காதலை
எப்படி சொல்வது மீண்டும்
வலுவற்ற வார்த்தைகளால் .....

அருண்குமார் சே

No comments: