Tuesday, April 7, 2009

சாதீ....

ஒட்டு வீடு பார்க்காத
ஓலை குடிசை கிராமம்
உன் பாட்டன் என் பாட்டன்
ஒன்னா வாழ்ந்த கிராமம்....
மேற்கால மூலையில
குருவி கூடாட்டம்
செல்லப்பன் குடிசை....
காக்கா துப்பி போன
விதை வளர்ந்த வேப்ப மரம்
வீட்டுக்கு முன்னாடி
வேர் விட்டு நிக்குதடி.....
கிராமத்து திருவிழான்னு
ஊர் மொத்தம் கூடி போக....
கொல்லையில குளிக்க போனான்
செல்லப்பன் அதிசியமே....
குளிக்க போன கோமாளி
இடுப்பு துண்டை கலட்டிபுட்டான்
மரத்தை சுத்தி கட்டிபுட்டான்....
ஊருக்குள்ள வந்த குப்பன்
துணி மரத்தை பார்த்துபுட்டான்
குல தெய்வம் ஆக்கிபுட்டான்...
கோவணத்தை அவன் கேக்க ....
குல தெய்வம்னு இவன் மறுக்க
வாய் சண்டை பெருசாச்சு
கை கலப்பு உருவாச்சு....
கூட்டம் கூடி போக
தடுக்கத்தான் நூறு பேரு....
கோவணத்தான் ஒரு சாதி,
குலதெய்வம் ஒரு சாதி,
தடுத்தவன் ஒரு சாதி,
தள்ளுனவன் ஒரு சாதி,
உள்ள குடிசை இரு நூறு,
வந்த சாதி மூந்நூறு .....
வேண்டாம்னு நான் சொல்ல
சாதி மொத்தம் மூன்னுத்தி ஒன்னு ஆச்சு...
விதை போட்ட காக்கா செத்து
விடியல் நாலு ஆயாச்சு....

அருண் குமார் சே

No comments: