Tuesday, April 7, 2009

கவிதை என்பது...

கவி எழுதும் எண்ணத்தில்
விரைந்து ஓடி வெண்தாள் எடுத்து
பேனா கிறுக்கி சோதனை முடித்து
மல்லாந்து படுத்து மண்டையை குழப்பி
மொட்டை மாடி ஏறி நட்சத்திரம் எண்ணி
தாடி தடவி தவித்து துடித்து
ஏதும் எழுத தோன்றாமல்
அதன் அதன் இருப்பிடம் எல்லாம் சேர்த்து
விளக்கணைத்து படுக்கையில்.....
காதுக்குள் கவிதை சொல்லி பறந்தது
என் கைக்குள் சிக்காத கொசு....

அருண்குமார் சே

1 comment:

ஜானு... said...

Naan than first .... :-)