தாளிடப்பட்ட கதவுகளுக்குள்
தயக்கமின்றி நிகழ்ந்தேறுகிறது...
வியர்வை எச்சில்
இந்திரியம் இல்லாமல்
கழிந்ததில்லை ஓர் இரவும்...
ஆடை சுமையென அகற்றி
பரவும் அடுத்த சுமை ஒன்று....
கடித்த உதடுகள்
நகங்களின் கீறல்கள்
சூறையாடப்பட்ட தேகம்
அறுத்தெறிந்த நரம்பு
ஏதும் புதுமையின்றி
என்றும் என்றென்றும் ....
கன்னிகழியா மனசு வலிக்கிறது
பகலில் ஆணுடன் செல்லும்
சராசரி பெண்ணை
சாலையில் பார்க்கும்போது....
அருண்குமார் சே
Tuesday, April 7, 2009
விற்பனை முடிந்த விடியல்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment