Tuesday, April 7, 2009

ஐங்குறு கவிதைகள்....

1) என்ன சொல்ல....

முன்னறிவிப்பு இன்றி சிரிக்காதே
தப்பாய் போகிறது வானிலை அறிக்கை....

2) கடைசி நிமிடம்....

எப்போது சொல்வது உன்னிடம்
நீ இறுதியாய் பிரிந்த அந்த வலியை...

3) நாத்திகம்....

உண்டு என்பதின் மீதான
இல்லை என்ற நம்பிக்கை....

4) வாழ்க்கை....

கழன்று விழும்
ஒற்றை கால் செருப்பை
மீட்டெடுக்கும் அவகாசம் இன்றி
விரையும் பேருந்துடனே
கரைகிறது வாழ்க்கை....

5) நாளை....

நாளை நிட்சயமெனில் சொல்லுங்கள்
இன்றேனும் உறங்குகிறேன்....

அருண்குமார் சே

No comments: