Tuesday, April 7, 2009

எல்லாம் தொலைத்து...

எப்போதும் என் ஆளுகைக்குள்
அடங்கியது இல்லை அது....
மூச்சினை அடக்கி
முக்தி நிலையில் தான் வாசிக்க வேண்டும்...
அதன் பொத்தல்கள் அடைத்தால் ஒழிய
எனக்காய் இசைப்பதில்லை.....

துளைகள் ஏதும் அற்ற
மூங்கில் பிரம்பொன்று வாங்கி கொண்டேன்....
ஏதும் தொலைக்காததாய்
எல்லாம் தொலைத்து...

அருண்குமார் சே

No comments: