Tuesday, April 7, 2009

நம்மில் யாரோ....

விரிந்து பரந்த மணற்பரப்பில்
உதிர்ந்து விழுந்த ஒரு
பொத்தான் தேடி திரிபவனாய்
ஒரு சிறு பயணம்....
முழுதும் சிதைந்த
விகார நிலையில்
பிண்டம் ஒன்று
விழுந்து கிடக்கிறது...
நிற்பதின் அவசியமோ அவகாசமோ இன்றி
ஏறி சென்றிருக்க வேண்டும் பல....
சற்றே நெருங்கி
சடலம் எதுவென பாத்தேன்.....
அதிர ஒன்றும் இல்லை
வெறும் மானுடம் தான்....
ஐயோ மறந்தே போனேன்
காபி ஆறிவிடும்
காலம் அனுமதித்தால்
பிறகு பார்க்கலாம்....
அஞ்சலியோ கண்டனமோ
எவரேனும் தெரிவித்தால்
வீட்டு தொலைக்காட்சி
சொல்லாமலா போகும்...

அருண்குமார் சே

1 comment:

Valli said...

kasappana unmai...