Tuesday, April 7, 2009

நீயற்ற நீண்ட பொழுதுகளில்....

கலிங்க அசோகனாய்
வெல்லும் தருணமும்
இழத்தல் சொல்கிறது....
சொல்ல இயலா உணர்வு
உள்தொண்டை தொடுகிறது....
நிர்மூலம் நங்கூரம் இட்ட
நிலை கொள்கிறது...
காண்பவை யாவும் கடினம் கடினம்....
திருவிழா கால பேருந்தாய்
நிறைந்த மனது
மரித்த நிலவை எரித்த வானமாய்
சூன்யமாய்....
நானே எனக்கு கடும்சுமையாய்
நீயற்ற நீண்ட பொழுதுகளில்....

அருண்குமார் சே

No comments: