Wednesday, April 8, 2009

இது இளமையின் தேசியகீதம்....

பூக்களில் இருந்து
புன்னகை திருடி
சிரித்து தொலைத்தாயே
என் புண்ணியம் பாவம்
எல்லாம் சேர்த்து
அரித்து எடுத்தாயே
வலி ஒன்றும் உணராமல்
கொலையாய் ஆனேனே
உளி ஒன்றும் உரசாமல்
சிலையாய் போனேனே
ஏனடி எப்படி தெரியவில்லை
ஏதும் எதுவும் புரியவில்லை....

அழகிப்போட்டி போகாதேடி
அரங்கதிரும் உன் நிழலில்
ஆதவனே கீரிடம் ஆவான்
அலை ஆடும் உன் குழலில்
கருவிழிகள் ஓரத்தாலே
உயிருக்குள் தீ வைத்தாய்
கண்ணிமைகள் மூடாவண்ணம்
முள்வைத்து ஏன் தைத்தாய்?
சித்தம் நடத்தும்
யுத்தம் நிறுத்த
ஒரு மொழி சொல்லிவிடு
சிகரம் உடைந்து
துகளாய் போனேன்
இயன்றால் அள்ளி எடு...

எரிமலையின் குளம்பள்ளி
என்மீது பூசாதே
எமன் கொண்ட பாசக்கயிற்றை
நீ வாங்கி வீசாதே
எரிதணலில் தள்ளிவிட்டால்
வேகாமல் உயிர்வாழ்வேன்
எதிர் பதிலை சொல்லிவிட்டால்
சாகாமல் பிணம் ஆவேன்
தேகம் முழுதும் தேனாய் ஊரும்
வரம்தனை தந்து விடு
காதல் தீயில் கருகிப்போனால்
உரமென தூவி விடு.....

அருண்குமார் சே

1 comment:

Valli said...

I love.....ur poems very much...