Tuesday, April 7, 2009

சுயம்....

நான் யார்?
நெருப்பா? விளக்கா?
எரிகிறேனா? எரிக்கிறேனா?
எரிகிறேன் எனில் எரித்தல் யார்?
எரிக்கிறேன் எனில் எரிதல் யார்?
எரிதலா எரித்தலா எது என் சுயம்?
எரிதல் எனில் எரித்தல் ஏன்?
எரித்தல் எனில் எரிதல் ஏன்?
எரிந்தால் என்ன மிஞ்சும்?
எரித்தால் என்ன எஞ்சும்?
விடியல் அற்ற இரவிலும் கொடிது
விடைகள் அற்ற கேள்விகள்....
சுயம் அறிதலின் அரிது
வேறொன்றும் இல்லை....

அருண்குமார் சே

No comments: